உட்புறம் பூட்டிக் கொண்ட கதவுகள்... உள்ளே மாட்டிக் கொண்ட விமானி: அவசரமாக தரை இறங்கிய விமானம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: நடுவானில் பறந்தபோது விமானியின் அறை கதவு திறக்காததால் அவசர அவசரமாக விமானம் தரையிரக்கப்பட்டது.

ஏர்-இந்தியா உள்நாட்டு விமானம் டெல்லி-பெங்களூர் இடையே இயக்கப்படுகிறது. இந்த விமானம் பெங்ளூரில் இருந்து டெல்லிக்கு நேற்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது தலைமை விமானிக்கு இயற்கை உபாதை ஏற்படவே அவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.

இயற்கை உபாதைகளை முடித்துவிட்டு திரும்பி வந்தபோது அவரது அறையின் கதவு உள்புறமாக மூடிக்கொண்டது தெரிய வந்தது. எவ்வளவோ போராடி பார்த்தும் கதவை திறக்க முடியவில்லையாம். இதனால் தலைமை விமானி விமானத்தை இயக்க முடியாத நிலைமை ஏற்பட்டதால் பயணிகள் மத்தியில் பெரும் பீதியும் பதட்டமும் ஏற்பட்டது.

இதனால், விமானி அறையின் உள்ளே இருந்த மற்றொரு விமானிக்கு வெளியே இருந்து தலைமை விமானி ஆலோசனைகளை வழங்கினார். பின் அவரது ஆலோசனையை பின்பற்றி போபாலில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

போபாலில் விமானம் தரையிறக்கப்பட்டதும் விமானி அறையின் கதவுகள் சரி செய்யப்பட்டு விமானம் மீண்டும் டெல்லியை நோக்கி புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+