ஐபில் 'பெட்'டில் 30 லட்சம் இழப்பு: 13 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த கல்லூரி மாணவன்
மும்பை: ஐபில் கிரிக்கெட்டில் பெட் வைத்து 30 லட்சத்தை இழந்த எம்.பி.ஏ கல்லூரி மாணவன், பணத்தை ஈடுகட்ட 13 வயது உறவுக்கார சிறுவனை கடத்தினான். பிணையத் தொகை தர மறுத்ததால் சிறுவனை கொலை செய்து, தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.
வயது வித்தியாசமின்றி அனைவரும் ரசிக்கும் விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்கான ஒன்று என்பதைத் தாண்டி விளையாட்டால், வாழ்க்கையை வினையாக்கிக் கொள்பவர்கள் ஏராளம்.
உலகின் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை வைத்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டிற்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.
மும்பையை சேர்ந்த எம்பிஏ படிக்கும் ஹிமான்ஷு ரங்கா என்ற மாணவன் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெட் வைத்து ரூ. 30 லட்சத்தை இழந்துள்ளார். இதனால் வெறுப்படைந்த அந்த மாணவன் அந்த பணத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற வெறியில் இருந்துள்ளான்.
பணம் பறிக்கும் நோக்கில், தனது பணக்கார உறவினர் ஒருவரின் 13 வயது சிறுவன் ஆதித்தியாவை கடத்தியிருக்கிறான். ஆதித்யாவின் அப்பா ஜிஜேந்திராவிடம் 30 லட்சம் பிணையத்தொகையாக கேட்டிருக்கிறான். ஆனால், ஜிஜேந்திராவோ போலீசை அனுகியுள்ளார்.
சாலையில் நின்றிருந்த காருக்கு அடியில் ஆதித்தியாவின் செருப்பை கண்ட ஜிஜேந்திரா. உடனே போலீசுக்கு தகவல் தந்துள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ரத்தக்கறை படிந்த தரைப்பகுதியை கண்டனர். மேலும் விசாரணை நடத்தி ஹிமான்ஷூவை பிடித்து விசாரித்ததில் பணம் தர மறுத்ததால் விகேஷ் சிங்கவி என்பவனுடன் சேர்ந்து இந்த சிறுவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.
கிரிக்கெட்டினால், படித்து முடித்து நல்ல வேலைக்கு சென்று, வாழ்க்கையில் பல முன்னேற்றங்களைக் காண வேண்டிய அந்த இளைஞன் தற்போது ஒரு சிறுவனின் வாழ்க்கையை முடித்து தன் வாழ்க்கையையும் அழித்துக் கொண்டுள்ளான் என்பது நிச்சயம் வேதனைக்குரிய விஷயமே.












Click it and Unblock the Notifications