ராஜ்யசபா தேர்தல்...மன்மோகன்சிங் வேட்புமனுத்தாக்கல் செய்தார்!
Subscribe to Oneindia Tamil

அசாமில் இருந்து எம்.பியான பிரதமர் மன்மோகன்சிங்கின் பதவிக் காலம் வரும் ஜூன் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து வரும் 30-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடுவதற்காக மன்மோகன் சிங் அசாம் மாநிலம் குவஹாத்தியில் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் இன்று தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங்கும் சென்றிருந்தார்.
அசாமில் 1991 ஆம் ஆண்டு முதல் முறையாக ராஜ்யசபா எம்.பி.யாக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கடந்த 1995, 2001, 2007 ஆண்டுகளிலும் அசாமில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications