தமிழ்த் தாயின் 'உயரத்தை' தடுப்பாரா மதுரை மீனாட்சி??

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் அமைக்கப்படவுள்ள தமிழ்த் தாயின் சிலையின் உயரம் எவ்வளவாக இருக்கும் என்பது மதுரை மக்களின் கியூரியாசிட்டியை தூண்டி விட்டுள்ளது.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை. மதுரைக்கு கோவில் பெருமை... மதுரையை ஆண்டு வருவது மீனாட்சி என்பது மதுரை மக்களின் ஐதீகம். அத்தகைய உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களும் உலகப் புகழ் பெற்றவையும் கூட.

நகரின் எங்கிருந்து பார்த்தாலும் கோபுரங்கள் தெரியும் வகையிலான உயரம் கொண்டவை அவை. அதிலும் தெற்கு கோபுரம்தான் மிக உயரமானது. இந்த நிலையில்தான் தமிழ்த் தாயின் சிலை உயரம் குறித்த ஆர்வம் எழுந்துள்ளது.

மீனாட்சி கோபுரத்தை விட

மீனாட்சி கோபுரத்தை விட

மதுரை நகரில் ஒரு விதிமுறை பல காலமாக அமலில் உள்ளது. அதாவது குறிப்பிட்ட உயரம் வரைதான் ஒரு கட்டடத்தை எழுப்ப முடியும்.

ஏன் அப்படி?

ஏன் அப்படி?

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் மக்கள் பார்வையிலிருந்து மறைந்து விடக் கூடாது. அதை விட உயரமாக எதுவும் இருக்கக் கூடாது என்ற எணணத்தில்தான் இந்த விதிமுறை பல காலமாக அமலில் உள்ளது.

உயராமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்

உயராமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்

பல விஷயங்களில் பெரிய அளவில் மதுரை வளர்ந்து விட்டாலும், கட்டட உயரத்தில் இதுவரை உயராமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும்.

கோபுர உயரம் 170 அடி

கோபுர உயரம் 170 அடி

மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரம்தான் இருப்பதிலேயே உயரமானது. அதாவது 170 அடியாகும்.

தமிழ்த் தாயின் உயரம் எவ்வளவோ?

தமிழ்த் தாயின் உயரம் எவ்வளவோ?

தற்போது அமைக்கப்படவுள்ள தமிழ்த் தாய் சிலையின் உயரம் 150அடி வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மதுரை கோவில் கோபுரங்களின் உயரத்தைத் தாண்டி இந்த சிலை இருக்காது என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+