கூட்டம் சேர்க்கிறவரெல்லாம் பிரதமர் வேட்பாளரா?: மோடியை பகிரங்கமாக எதிர்க்கும் உமாபாரதி!

பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடியைத்தான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தக் கூடும் எனத் தெரிகிறது. இருப்பினும் அவருக்கு எதிராக அக்கட்சியில் குரல் எழுப்புவோரும் இருந்து வருகின்றனர். குறிப்பாக ஐக்கிய ஜனதா தளத்தை தூண்டிவிட்டு மோடியை எதிர்க்கச் செய்வதே கூட பாஜகவில் உள்ள ஒரு பிரிவினர்தான் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான உமாபாரதி நரேந்திர மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், கூட்டம் சேர்ப்போம் எல்லாம் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர் கிடையாது. நான் போகிற இடங்களில் எல்லாம் எனக்கும் கூட்டம் கூடுகிறது. அதற்காக நான் பிரதமர் வேட்பாளராகி விட முடியாது. பாரதிய ஜனதாவில் அத்வானி முக்கியமான தலைவர். அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. பாரதிய ஜனதாவில் இருந்து வெளியேறிய நான் மீண்டும் கட்சிக்கு வருவதற்கு அவர்தான் காரணம்.
ஒரு சிலர் இருக்கையில் அமர்ந்து கொண்டு பிரதமர் வேட்பாளரை முடிவு செய்ய முடியாது. வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களுக்குத்தான் அந்த தகுதி உண்டு. அவர்கள்தான் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யக் கூடிய தகுதி படைத்தவர்கள். அத்வானி ஒரு துறவி போன்றவர் என்றார்.












Click it and Unblock the Notifications