சென்னை கோர்ட்டில் பரபரப்பு... மாஜிஸ்திரேட் முன்பு கைதிக்கு கத்திக்குத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை எழும்பூர் கோர்ட்டுக்குள் இன்று மாஜிஸ்திரேட் முன்பு ஒரு கைதியை இன்னொரு கைதி கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அரும்பாக்கத்தைச்சேர்ந்தவர் சலீம்பாபு . இவரும் அண்ணாதுரை என்பவரும் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சலீம்பாபு சேர்க்கப்பட்டுள்ளார். 2வது குற்றவாளியாக அண்ணாதுரை சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு எழும்பூர் 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இன்று மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி முன்பு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென உள்ளே புகுந்த அண்ணாதுரை, சலீம் பாபுவின் கழுத்தில் கத்தியால் குத்தினார்.
இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சலீம்பாபு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications