நிலக்கரி ஊழல் வழக்கை விசாரித்த சிபிஐ விசாரணை அதிகாரி கைது!
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் புதிய திருப்பமாக சிபிஐ-ன் விசாரணைக் குழு தலைமை அதிகாரி விவேக் தத் லஞ்சப் புகார் ஒன்றில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
தொழில் அதிபர் ஒருவருக்கும் வேறொருவருக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து நிலப்பிரச்சனை இருந்து வந்தது. இதில் விவேக் தத் தலையிட்டு தொழிலதிபருக்கு சாதகமாக தாம் பிரச்சனையை முடித்து தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக ரூ7 லட்சம் லஞ்சமும் பேரம் பேசப்பட்டது.
இந்த லஞ்சப் பணத்தை விவேக் தத் சார்பாக சிபிஐ ஆய்வாளர் ராஜேஷ், சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வெளியே பணம் பெற்றுக் கொண்டார். அப்போது ராஜேஷ் சிக்கினார். அவரைத் தொடர்ந்து விவேக் தத், தொழிலதிபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பணபரிமாற்றம் குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததாகவும் அதனை அடுத்தே அவர்களை கையும் களவுமாக கைது செய்ததாகவும் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார். இருப்பினும் இதனால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விசாரணையில் பாதிப்பு ஏற்படாது என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications