அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!
Subscribe to Oneindia Tamil

தண்ணீருக்காக ஏங்கித் தவிக்கும் மக்களை ஏமாற்றாமல் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டது. தென்பகுதி வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் பருவமழை தொடங்கியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் பருவமழை விரிவடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 3ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கக்கூடும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், ஜூலை மாதத்தின் மத்தியில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் பருவமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
இந்த ஆண்டு பருவமழைக்காலம் இயல்பாக இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications