சத்தியமூர்த்தி பவனுக்கு பூட்டு போட முயற்சி.. இந்து மக்கள் கட்சியினர் 5 பேர் கைது!
சென்னை: சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்குப் பூட்டு போட செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2 லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்க காரணமான காங்கிரஸ் கட்சியை தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். இதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு பூட்டு போடும் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பது இந்து மக்கள் கட்சியின் அறிவிப்பு.
இந்த அறிவிப்பின்படி நேற்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் எஸ்.ஆர்.குமாரவேல் தலைமையில் 5 பேர் பூட்டுடன் சென்னை சத்தியமூர்த்தி பவன் நோக்கி சென்றனர். ஆனால் அவர்களை அண்ணாசாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.குமாரவேல், தென் சென்னை மாவட்ட செயலாளர் கே.பூபாலன், கோபிகுமார், நாராயணன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications