பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் 5 மோசடி வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
3 முறை அவர் போலீஸ் காவலிலும் விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் 3 வழக்குகளில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு வடமலை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பவர்ஸ்டார் சீனிவாசனின் மனைவிகள் துருவியா, ஜுலி ஆகியோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பவர் ஸ்டார் சீனிவாசன் சிறைக்குள் இருப்பதால் அவர் நடிக்கவிருந்த பல படங்களில் அவருக்குப் பதில் வேறு நடிகரை ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.












Click it and Unblock the Notifications