கடலூரில் சீமான் கூட்டம்: தமிழக அரசு திடீர் தடை!... நள்ளிரவில் நோட்டீஸ் ஒட்டிய போலீஸ்

நடிகரும், இயக்குனருமான சீமானின் நாம் தமிழர் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைக் கண்டித்து கடலூரில் இன்று பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் நடத்த அனுமதி கோரி கடந்த 16ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் கூட்டம் நடத்த அனுமதி அளித்தது.
பொதுக் கூட்டத்தையொட்டி கடலூர் முழுவதும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக நடத்தப்படும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதிகா, மாவட்ட கலெக்டர் கிர்லோஷ் குமாருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட கலெக்டர், கூட்டத்துக்கு தடை விதித்தார்.
இது தொடர்பான நோட்டீஸை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளரிடம் அதிகாலை 2.30 மணிக்கு காவல்துறையினர் அளிக்க சென்றனர். ஆனால் அதனை வாங்க அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து, அவரது வீட்டின் கதவில் நோட்டீஸை காவல்துறையினர் ஓட்டினர்.
இதைத் தொடர்ந்து கடலூரில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பேனர்களையும் இரவோடு இரவாக போலீசார் அகற்றினர்.
கூட்டம், கருத்தரங்கம்
இதனிடையே கூட்டம் நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளதால் கண்டிப்பாக கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட அமைப்பாளர் கடல் தீபன் கூறியுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று கருத்தரங்கமும் நடைபெறுகிறது. இதில் சீமான் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதனால் கடலூரில் பதற்றமான நிலை காணப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications