காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: 3வது முறையாக ஜெ. கடிதம்

Subscribe to Oneindia Tamil

Jaya's new letter on Cauvery will embarrass PM
சென்னை: டெல்டா விவசாயிகளின் துயர் துடைக்க காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக மூன்றாவது முறையாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

பாசன ஆண்டு நெருங்குவதால் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவைஉடனே அமைக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே 22-2-2013 மற்றும் 11-3-2013 ஆகிய நாட்களில் தங்களுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும், அவற்றை அமைக்க மத்திய அரசு தேவையான சுறுசுறுப்பை காட்டவில்லை.

அதன்பின்னர் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின்னர், காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக நீர்வளத்துறை செயலர் தலைமையில் மேற்பார்வைக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது இடைக்கால ஏற்பாடுதான்.

எனவே, தமிழ்நாடு மற்றும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் துயரத்தை போக்க வேண்டும் என்றால் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிர் நீர் ஒழுங்குமுறை குழு அமைப்பதுதான் ஒரே நிரந்தர தீர்வு ஆகும்.

எனவே, மேலும் காலம் தாழ்த்தாமல். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை அமைக்க மத்திய நீர்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+