காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்குக: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு 4-ம் ஆண்டு நினைவேந்தல் பொதுக் கூட்டம், சென்னை புரசைவாக்கம், தானா தெருவில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ கூறியதாவது:

4 வருடங்களுக்கு முன் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள அரசினால் இனப் படுகொலை செய்யப்பட்டனர். பச்சிளம் குழந்தைகள், வ

Vaiko wants Sri Lanka to be ousted from Commonwealth |

படுகொலை நடத்திய சிங்கள கொடியோர் கூண்டில் நிறுத்தப்பட வில்லை. அவர்களை தண்டிப்பதோடு மட்டுமன்றி ஈழத் தமிழர்களை கொடுமைகளில் இருந்து காக்கும் பொறுப்பும், ஈழத் தமிழீழத்தை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பும் தாய்த் தமிழகத் தமிழர்களுக்கு உண்டு.

வருகிற நவம்பர் 17, 18-ந் தேதிகளில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற உள்ளது. அதன்பிறகு 2 வருடத்திற்கு அந்த அமைப்பிற்கு ராஜபக்சே தலைமை தாங்க இருக்கிறார். இலங்கையில் மனித உரிமை நசுக்கப்பட்டு, இனப்படுகொலை நடைபெற்றுள்ளதால் காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து கலந்து கொள்ள கூடாது என்று இங்கிலாந்தில் கோரிக்கை எழுந்துள்ளது.

இனப்படுகொலை நிகழ்த்தி உள்ள இலங்கை அரசு காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழீழம் மலரும். அதற்கு தாய் தமிழர்களாகிய நாம் போராட வேண்டும் இவ்வாறு வைகோ கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+