சீமானின் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரின் யாசின் மாலிக்..கடலூரில் பரபரப்பு!
கடலூர்: கடலூரில். நடைபெற்ற இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்க கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மே 17 நிகழ்வின் நினைவு தினப் பொதுக்கூட்டம் பேரணியை கடலூரில் நடத்த நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், இந்தப் பேரணிக்கும் பொதுக்கூட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தை உள்ளரங்கில் வைத்து நடத்த நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்தனர்.
அதன்படி, கடலூரில் சிதம்பரம் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் உள்ளரங்கு மாநாடாக இது நடைபெற்றது. தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்தியதால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுவதாக போலீசார் கூறியிருந்தனர். இந்த நிலையில் இந்த உள்ளரங்கக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்கும் கலந்து கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், இந்தியாவில் இருந்து காஷ்மீர் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறவர். அண்மையில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட போது பாகிஸ்தானில் இருந்த யாசின் மாலிக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதில் மும்பை தாக்குதலில் தேடப்படும் தீவிரவாதி ஹபீஸ் சையத்தும் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications