சிறைக் கொலைகள் எதிரொலியா...? : பாகிஸ்தானில் 51 இந்திய மீனவர்கள் விடுதலை :
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறைகளில் வாழும் 51 இந்திய மீனவர்களை மனிதாபிமானம் மற்றும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட இந்திய கைதி சரப்ஜித் சிங் கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் இந்திய சிறையில் பாகிஸ்தான் கைதி சனாவுல்லா ரஞ்சய் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இறந்தார். இந்த சம்பவங்களால் இரு நாடுகளிடையே உள்ள பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு முன்வந்துள்ளது.
இடைக்கால சட்ட மந்திரி, இடைக்கால சிந்து மாகாண முதல்வர் மற்றும் உள்துறை, வெளியுறவு மற்றும் சட்டத்துறை மூத்த அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் ஆகியோர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இடைக்கால பிரதமர் மிர் கஸார் கான் கோசோ முடிவு செய்திருப்பதாகவும், அவர்கள் ஏற்கனவே தங்களின் தண்டனைக் காலத்தை நிறைவு செய்திருப்பதால் இந்த முடிவு எனவும் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை இந்திய அரசு விடுதலை செய்யும் என்று கோசோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் எப்போது இந்திய வீரர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது குறித்து அறிவிப்பு ஏதுமில்லை.
இந்திய கைதிகள் நாடு திரும்பியதும், பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என்றும் வெளியுறவு மந்திரியிடம் பிரதமர் தெரிவித்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications