தூங்கவில்லை, குளிக்கவில்லை... தவிக்கும் ஸ்ரீசாந்த்

ஸ்பாட் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கி கைதாகியுள்ளார் ஸ்ரீசாந்த். தற்போது அவரை 5 நாள் காவலில் எடுத்துள்ளனர் டெல்லி போலீஸார். டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துத்தான் விசாரணை நடந்து வருகிறது. இங்குள்ள சிறிய அறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீசாந்த்.
அங்கு பாத்ரூம் சரியில்லாததால் குளிக்க முடியவில்லையாம்.இதனால் குளிக்காமலேயே இருக்கிறாராம் ஸ்ரீசாந்த். அதேபோல ராத்திரியில் தூக்கம் வராமல் தவிக்கிறாராம்.
அறையில் ஸ்ரீசாந்த் மட்டும் தனியே அடைக்கப்பட்டிருக்கிறார். பெரும்பாலான நேரங்களில் அமைதியாக இருக்கிறாராம். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளாராம். சில நேரங்களில் அழுகிறாராம். கடந்த 2 நாட்களாக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீசாந்த் விசாரணையின்போது அழுதபடியே பேசுகிறாராம்.
விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முதல் நாளன்று சாப்பிட மறுத்து விட்டாராம் ஸ்ரீசாந்த். அடுத்த நாள் முதல் சாப்பிட்டு வருகிறாராம்.
விசாரணையின்போது தனது குற்றத்தை ஸ்ரீசாந்த் ஒத்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications