கசாப் அறையில் இருக்க பயந்த சஞ்சய் தத் வேறு அறைக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கடந்த 16ம் தேதி மும்பையில் உள்ள தடா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவர் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் அடைக்கப்பட்டிருந்த முட்டை வடிவ அறையில் தத் அடைக்கப்பட்டார்.
அந்த அறையில் இருப்பது தனக்கு மூச்சு முட்டுகிறது என்றும், வேறு அறைக்கு மாற்றுமாறும், தன்னை பார்க்க உறவினர்களை அனுமதிக்குமாறும் அவர் தடா நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவரை வேறு அறைக்கு மாற்ற உத்தரவிட்டது. அதன்படி அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டார்.
மேலும் அவரது மனைவி மான்யாதாவும், சகோதரி பிரியாவும் அவரை சந்தித்து பேசினர். சஞ்சய் வேறு அறைக்கு மாற்றப்பட்டதால் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications