வட மாநிலங்களில் வறுத்தெடுக்கும் வெயில்: மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்

வட மாநிலங்களில் வெயில் அடித்தாலும் கொளுத்தி எடுக்கும், குளிர் அடித்தாலும் நடுக்கி எடுக்கும். இந்நிலையில் நேற்று வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. சுமார் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் அடித்ததால் மக்களால் வெளியே செல்ல முடியவில்லை. அனல் காற்று வேறு வீசியதால் மக்கள் வீடுகளில் முடங்கினர்.
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் இருப்பதிலேயே அதிகபட்சமாக 47 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் வறுத்து எடுத்தது. மேலும் டெல்லியில் 44.6 டிகிரி செல்சியஸும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் 46 டிகிரி செல்சியஸும் வெயில் அடித்தது. வெயில் காலம் துவங்கி நேற்று தான் டெல்லியில் அதிகமாக வெயில் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஹரியானாவில் ஹிஸாரில் அதிகபட்சமாக 46 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது.
பஞ்சாப் மாநிலத்தில் சன்டிகர், அமிர்தசரஸ் மற்றும் லூதியானாவில் வெயில் வறுத்தெடுக்கிறது.












Click it and Unblock the Notifications