திருப்பதி ஏழுமலையானுக்கு 4143 ஏக்கர் நிலம் சொந்தம்... தனி டிரஸ்ட் உருவாகிறது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் பணம், நகை, நிலம் போன்றவைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமாக உள்ள தேவஸ்தான சொத்துகளை ஓராண்டு காலம் சர்வே செய்யப்பட்டது. அதன்படி பக்தர்கள் வழங்கிய நிலங்கள் 4,143 ஏக்கர் இருப்பது தெரியவந்தது. இந்த நிலங்களுக்கு 2010ம் ஆண்டு நிலவரப்படி அரசு மதிப்பீட்டில் ரூ.33,447 கோடியாக இருந்தது. இதில் ஆந்திராவில் மட்டும் ரூ.33,149 கோடியும், மற்ற மாநிலங்களில் ரூ.299 கோடியாக இருந்தது.
அதன்பிறகு இதுவரை பக்தர்கள் 100 ஏக்கர் மதிப்புள்ள நிலங்களை தேவஸ்தானத்துக்கு வழங்கியுள்ளனர். நிலங்களின் மொத்த மதிப்பு தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என தேவஸ்தான நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற அசையா சொத்துகளை பெறுவதற்கு தனி டிரஸ்ட் அமைத்தால் மேலும், பல பக்தர்கள் நிலங்களை அதிக அளவில் தர முன் வருவார்கள் என தேவஸ்தான தலைமை செயல்அலுவலர் எல்.வி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
இதையொட்டி, பூதேவி, பிருத்வி, சப்தகிரி ஆகிய 3 பெயர்களில் ஏதாவது ஒரு பெயரில் டிரஸ்ட் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய டிரஸ்ட் அமைப்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தலைமை செயல் அதிகாரி எல்.வி.சுப்பிர மணியம் தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications