Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவும், சீனாவும் இனி, கூட்டாளிகள் என்கிறார் சீனப் பிரதமர் லீ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்தது, எல்லைப் பிரச்சினை தீர்ந்தது. இந்தியாவும், சீனாவும் போட்டி நாடுகள் அல்ல, கூட்டாளிகள் என சீனப் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.

3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்த சீனப்பிரதமர் லீ கெகியாங், நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன்சிங்குடன் விரிவான பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் எல்லைப்பிரச்சினைக்கான தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. மேலும் இப்பேச்சு வார்த்தையில், 8 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

பின்னர், நேற்று டெல்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சில், இந்திய தொழில் வர்த்தக சபை (பிக்கி) ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவர்களிடையே லீ கெகியாங் பேசினார்.

China Premier’s India trip is about new strategies

நிகழ்ச்சியில் லீ கெகியாங் கூறியதாவது,

நாங்க கூட்டாளிகள்...

இந்தியா மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது. இந்தியாவும், சீனாவும் போட்டி நாடுகள் என்பதை விட கூட்டாளிகள் என்றுதான் சொல்வேன். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை, மிகப்பெரிய சந்தையுடன் ஒவ்வொரு தரப்பும் முன்னேற்றம் அடைவது என்பது அவர்களது மக்களுக்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. உலக பொருளாதார வளர்ச்சிக்கு இரு நாடுகளும் புதிய என்ஜின்களாக இணைந்து செயல்படும்.

இந்திய-சீன உறவு...

21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய உறவாக இந்திய-சீன உறவு அமைந்துள்ளது. உலக அமைதிக்கும், வளத்துக்கும் இவ்விருநாடுகளும் இணைந்து புதிய அத்தியாயத்தை எழுத முடியும். இந்தியாவும், சீனாவும் ஒரே குரலில் பேசுகிறபோது, அதை உலகமே காது கொடுத்து கேட்கும். பிரதமர் மன்மோகன்சிங்குடனும், பிற இந்திய தலைவர்களுடனும் நான் நடத்திய பேச்சு வார்த்தை களங்கமற்றதாக, நிறைவானதாக அமைந்தது. இந்தப் பேச்சு வார்த்தைகள், சந்திப்புகள் எனக்கு திருப்தி அளித்தது.

எல்லைப்பிரச்சினைக்கு தீர்வு...

எல்லா விஷயத்தையும் விவாதப்பொருளாக்கி பேசினோம். எல்லைப்பிரச்சினை குறித்தும் விலகி ஓடி விட வில்லை. எல்லைப்பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு முன்னெடுத்துச்செல்ல இரு தரப்பிலும் ஒப்புக்கொண்டுள்ளோம் என லீ கெகியாங் கூறினார்.

பழமொழி கூறி அசத்திய லீ....

அண்டை நாடான இந்தியாவுடன் சீனா கொண்டுள்ள நட்புறவின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதத்தில், 'பக்கத்தில் உள்ள அண்டை வீட்டுக்காரரைவிட தொலைவில் உள்ள உறவினர் பயன்தரமாட்டார் என்ற அர்த்தம் பொதித்த சீனப்பழமொழியை லீ கூறினார்.

சொந்த நாடு போல் உணர்ந்தேன்...

பிரதமர் லீ கெகியாங்கின் இந்தியப்பயணம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள சீன அரசு பத்திரிகை ஒன்று, ‘‘பிரதமர் மன்மோகன்சிங்குடனான பேச்சுவார்த்தை ஆழமானது, நட்புரீதியிலானது, வெளிப்படையானது. இது நான் சொந்த நாட்டில் இருப்பது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. மன்மோகன்சிங்கின் ஏற்பாடுகளுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்'' என்று பிரதமர் லீ கூறியதாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் போகிறார் லீ...

நேற்று, இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்ட சீனப்பிரதமர் லீ கெகியாங் இன்று பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+