தேனி போலீஸ் ஸ்டேசனில் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம்: போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு
தேனி: தேனி அருகே போலீஸ் ஸ்டேசனில் 3 நாட்கள் அடைத்து வைத்து பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரர்கள் மீது, சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், கடமலைகுண்டு காவல்நிலைய போலீசார் வசந்தி என்ற பெண்ணை கற்பழித்ததோடு, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என 3 நாட்கள் காவல் நிலையத்திலேயே வைத்து சித்திரவதை செய்ததனர். அதோடு மட்டுமல்லாது போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராஜ்குமார் மற்றும் உதவி ஆய்வளர் அமுதன் ஆகியோர், அந்த பெண் மீதே பொய் வழக்கு போட்டனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட வசந்தி, தனக்கு நேர்ந்த கொடுமையை தமிழக முதல்வர், டி.ஜி.பி, எஸ்.பி. உள்ளிட்ட மேலதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். ஆனாலும் வசந்தி அலைக்கழிக்கப்பட்டார். வசந்தியின் புகாரை தமிழக காவல்துறை கண்டு கொள்ளவில்லை. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் வசந்தி.
வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், சம்பவம் நடந்து பதினைந்து மாதங்களாகியும், எப்.ஐ.ஆர். கூட போடாத தேனி மாவட்ட போலீசார் இந்த வழக்கை விசாரிக்க கூடாது எனக்கூறி, வழக்கை சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது.
சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராசாத்தி தலைமையிலான போலீஸார் கடந்த ஒரு மாதமாதத்திற்குள் தங்கள் விசாரணையை முடித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண் வசந்தியிடம் நேரில் விசாரித்தபிறகு, சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது, கற்பழித்தல், அதிகார துஷ்பிரயோகம் செய்தல், பெண்ணை சித்தரவதை செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், மொத்தம் 16 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தேனி மாவட்ட காவல்துறையையே தலை குனிய வைத்திருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications