தமிழக உள்துறை செயலாளர் ராஜகோபால் மாற்றம் ஏன்?: பரபரப்பு தகவல்

தமிழக உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபால் திடீரென்று அப்பதவியில் இருந்து மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கழக தலைவராக மாற்றப்பட்டுள்ளார். மாநில அரசில் தலைமை செயலாளருக்கு அடுத்து முக்கியமான பதவி உள்துறை செயலாளர் பதவி.
தமிழக சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து துறை, மதுவிலக்கு ஆகிய பிரிவுகள் உள்துறை செயலாளருக்கு கீழ் இயங்கும் துறைகளாகும். மேலும் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகியோரை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்துறை செயலாளருக்கு மட்டுமே உண்டு. இப்படிப்பட்ட உயர் அதிகாரம் படைத்த பதவியில் இருந்து ராஜகோபால் சாதாரண பணிக்கு மாற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, உள்துறை செயலாளர் ராஜகோபால் மிக கண்டிப்பானவர் என பெயர் எடுத்தவர். ஆனால், தான் சொல்வதை தான் மற்ற அதிகாரிகள் கேட்க வேண்டும் என்று கருதுபவர். அவருக்கும் டி.ஜி.பி. ராமானுஜத்திற்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் பனிப்போர் நடத்து வந்தது.
இதனால் உள்துறையில் ஏராளமான பைல்கள் தேங்கத் தொடங்கின. குறிப்பாக, போலீஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் கடந்த 4 மாதத்துக்கு மேலாக உள்துறையில் தேங்கியுள்ளது. இது தவிர மரக்காணம் கலவர விவகாரத்தில் தமிழக உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபால் முறையாக செயல்படவில்லை என்றும், கடலூரில் நாம் தமிழர் இயக்கம் நடத்திய கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் தமிழக அரசுக்கும், உள்துறைக்கும் முன் கூட்டியே தெரியமால் கலந்து கொண்டு டெல்லி வழியாக காஷ்மீர் சென்று விட்டார். இந்த தகவல் முதலவர் ஜெயலலிதாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், யாசின் மாலிக் பேச்சு குறித்து தமிழக தலைமை செயலாளரிடம் மத்திய உள்துறையில் இருந்து விளக்கம் கேட்டதாகவும், இதனால் தான் உள்துறைச் செயலாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications