காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய கண்காணிப்பு குழு: மத்திய அரசு அமைத்தது
Subscribe to Oneindia Tamil

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இடைக்கால ஏற்பாடாக இக்குழு செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு புதிய கண்காணிப்புக்குழு செயல்படும் என்றும் புதிய கண்காணிப்பு குழு கூட்டம் ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் நீர் ஆதாரத்துறை செயலாளருடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநில தலைமைச் செயலாளர்கள் இடம் பெறுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மத்திய நீர் ஆணையத் தலைவரும் இக்குழுவில் உறுப்பினராக இடம் பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்தும் பணியில் இடைக்கால குழு ஈடுபடும் என்றும் தீர்ப்பை செயல்படுத்துவதில் சிக்கல் எனில் மாநிலங்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications