ஏங்க.. எல்லோரும் வேகமா ஸ்ரீசாந்த்தோட டிவிட்டர் பக்கம் போய்ப் பாருங்களேன்...!
பெங்களூர்: அதாவது, நேரம் நல்லாருந்தா எல்லாமே நல்லாருக்கும், இல்லாட்டி தொட்டதெல்லாம் கிறுக்குத்தனமாகவே முடியும். ஆனால் நம்ம ஸ்ரீசாந்த்துக்கு கெட்ட நேரத்துலயும் ஒரு நல்லது நடக்குது பாருங்க.. அதுதாங்க ஆச்சரியமா இருக்கு.
அவருடைய டிவிட்டர் பக்கம் போய்ப் பார்த்தால் ரொம்பவே ஷாக் ஆகிப் போய் விடுவீர்கள். காரணம், அவரது பாலோயர்களின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்திருப்பதுதான்.
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கி கைதாகி விட்ட ஸ்ரீசாந்த்துக்கு டிவிட்டரில் ஆதரவு குவிந்து வருவதுதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மே 16 ராத்திரி...
மே 16ம்தேதி ராத்திரிதான் கைதானார் ஸ்ரீசாந்த். அப்போது அவருக்கு 6,67,564 பின்பற்றுவோர் இருந்தனர். இது அப்படியே கூடி 6,72,927 ஆக உயர்ந்துள்ளது.
|
கடைசியா டிவிட் செய்தது
அவர் கடைசியாக மே 10ம் தேதி டிவிட் செய்துள்ளார்.

இதெல்லாம் நல்லதுக்கா...
ஸ்ரீசாந்த் மிகப் பெரிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்குஆதரவு தெரிவிப்போர் பல்கிப் பெருகி வருவது நல்லதற்கு , கெட்டதுக்கா என்றே தெரியவில்லை.

கேரளாவில் கொந்தளிப்பு.. டிவிட்டரில் குதூகலிப்பு
ஸ்ரீசாந்த்தின் சொந்த மாநிலமான கேரளாவில் அவருக்கு அதிருப்தி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் டிவிட்டரில்ஆதரவு பெருகுவது ஆச்சரியம்தான்.












Click it and Unblock the Notifications