ஐபிஎல் பிக்ஸிங்.. குருநாத் மெய்யப்பனுக்கு மே 29 வரை போலீஸ் காவல்!

ஐபிஎல் பிக்ஸிங்கில் பாலிவுட் நடிகர் வின்து மூலமாக பெட்டிங்கில் ஈடுபட்டார் குருநாத் மெய்யப்பன் என்பது அவர் மீதான புகார். இந்தப் புகாரில் நேற்று இரவு மும்பையில் சில மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்தும் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பிற்பகல் 1 மணி அளவுக்கு அவர் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். குருநாத் மெய்யப்பனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. இதன் மீது பிற்பகல் 2 மணியளவில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் மே 29-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
குருநாத் மெய்யப்பனிடம் இருந்து 4 தொலைபேசிகளை மும்பை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் அதில் இருந்துதான் புக்கிகளுடன் அவர் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications