ஐபிஎல் பிக்ஸிங்.. குருநாத் மெய்யப்பனுக்கு மே 29 வரை போலீஸ் காவல்!

Subscribe to Oneindia Tamil

Betting case: Meiyappan sent to police custody till May 29
மும்பை: ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பனை மே 29-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ஐபிஎல் பிக்ஸிங்கில் பாலிவுட் நடிகர் வின்து மூலமாக பெட்டிங்கில் ஈடுபட்டார் குருநாத் மெய்யப்பன் என்பது அவர் மீதான புகார். இந்தப் புகாரில் நேற்று இரவு மும்பையில் சில மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்தும் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பிற்பகல் 1 மணி அளவுக்கு அவர் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டார்.

நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். குருநாத் மெய்யப்பனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. இதன் மீது பிற்பகல் 2 மணியளவில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் மே 29-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

குருநாத் மெய்யப்பனிடம் இருந்து 4 தொலைபேசிகளை மும்பை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் அதில் இருந்துதான் புக்கிகளுடன் அவர் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+