எனக்கு பல வீரர்களை தெரியும், அதில் பஜ்ஜி, ஜோஹ்லி ரொம்ப நெருக்கம்: வின்து தாரா சிங்

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்தது தொடர்பாக மறைந்த பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங்(49) கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை விசாரிக்க விசாரிக்க பல பேரின் பெயர்கள் வெளியே வருகிறது.
விசாரணையில் தக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ குருநாத் மெய்பப்னுக்கும் தொடர்பு உண்டு என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் விசாரணையில் கூறுகையில், தனக்கு பல கிரிக்கெட் வீரர்களைத் தெரியும் என்றாலும் அதில் விராத் கோஹ்லி, ஹர்பஜன் சிங் மற்றும் மன்ப்ரீத் கோனி ஆகியோர் தான் நெருக்கமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் பல பாலிவுட் பிரபலங்கள் சார்பில் தான் பெட் வைத்ததாகவும், தனது நண்பர் ஆனந்த் சாக்சேனா தான் தன்னை பல ஆண்டுகளுக்கு முன்பு பெட்டிங் ராக்கெட் ஆட்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனந்த் தான் வின்துவுக்கு ரமேஷ் வியாஸ் மற்றும் ஷோபன் மேத்தா ஆகிய தரகர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
மன்ப்ரீத் தற்போது கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு விளையாடி வருகிறார். அவர் 2008ம் ஆண்டில் செ்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications