மறுபடியும் டி.எம்.எஸ். மாதிரி ஒருவர் கிடைக்க மாட்டார்- அழகிரி உருக்கம்
சென்னை: டி.எம். செளந்தரராஜன் மாதிரியான ஒரு பாடகர் இனி கிடைக்க மாட்டார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உருக்கமாக கூறியுள்ளார்.
டி.எம்.எஸ்ஸின் வீட்டுக்குச் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் மு.க.அழகிரி. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
திரையுலகமே நடத்தாத ஒரு பாராட்டு விழாவை நான் மதுரையில் டி.எம்.செளந்தரராஜனுக்கு நடத்தினேன். திமுக தலைவர் கலைஞர், இயக்குநர் பாலச்சந்தர், இசையமைப்பாளர் விஸ்வநாதன், ராமமூர்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் வந்து பாராட்டினார்கள். அந்த நிகழ்ச்சி என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி.
அந்த நிகழ்ச்சியை பாராட்டு டி.எம்.எஸ். எத்தனையோ முறை மேடைகளில் பேசியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு பாடகர் மீண்டும் இந்த உலகத்துக்கு கிடைப்பாரா என்று தெரியவில்லை. அவர் மறைந்தாலும், அவருடைய குரல் இந்த உலகத்தைவிட்டு என்றுமே மறையாது என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications