ஆருஷி கொலை வழக்கு: பெற்றோரின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!
டெல்லி: டெல்லி புறநகரில் சிறுமி ஆருஷி , வீட்டு வேலையாள் ஹேம்ராஜ் ஆகியோர் படுகொலை செய்யபட்ட வழக்கில் 14 சாட்சிகளை மீண்டும் விசாரிக்கக் கோரும் என்ற ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் மற்றும் நூபுர் தல்வார் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் தள்ளுபடி செய்தது.
டெல்லி அருகே நொய்டாவில் ராஜேஷ், நூபுர் தல்வார் வீட்டில் அவரது மகள் ஆருஷி மற்றும் வேலையாள் ஹேம்ராஜ் ஆகியோர் கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இவ்வழக்கை விசாரித்த சிபிஐ தல்வார் தம்பதி தான் இருவரையும் கொலை செய்தனர் என கைது செய்தது. சிபிஐ விசாரணை அதிகாரி அனிலும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி ஆருஷி கொலைக்கு தல்வார் தம்பதி தான் எப்படி காரணம் என்று விவரித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 14 சாட்சியங்களை மீண்டும் விசாரிக்க வேண்டும் என தல்வார் தம்பதி விசாரணை நீதிமன்றத்தில் ஆருஷியின் பெற்றோர் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் இம்மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதைத் தொடர்ந்து நேரடியாக மே 13-ந் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க தடை கோரி மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் உச்சநீதிமன்றமோ, அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்குப் போகாமலேயே உச்சநீதிமன்றம் வந்தது தவறு என்று ஆருஷி பெற்றோரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்து அவர்கள் போயினர் .அங்கும் அவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 14 சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற தல்வார் தம்பதியினரின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து 14 சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யலாம் என உத்தரவிட்டது.

-
ஓபிசி கிரிமிலேயர் வருமான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications