ஆருஷி கொலை வழக்கு: பெற்றோரின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி புறநகரில் சிறுமி ஆருஷி , வீட்டு வேலையாள் ஹேம்ராஜ் ஆகியோர் படுகொலை செய்யபட்ட வழக்கில் 14 சாட்சிகளை மீண்டும் விசாரிக்கக் கோரும் என்ற ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் மற்றும் நூபுர் தல்வார் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் தள்ளுபடி செய்தது.

டெல்லி அருகே நொய்டாவில் ராஜேஷ், நூபுர் தல்வார் வீட்டில் அவரது மகள் ஆருஷி மற்றும் வேலையாள் ஹேம்ராஜ் ஆகியோர் கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இவ்வழக்கை விசாரித்த சிபிஐ தல்வார் தம்பதி தான் இருவரையும் கொலை செய்தனர் என கைது செய்தது. சிபிஐ விசாரணை அதிகாரி அனிலும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி ஆருஷி கொலைக்கு தல்வார் தம்பதி தான் எப்படி காரணம் என்று விவரித்தார்.

Rajesh Talwar and Nupur Talwar

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 14 சாட்சியங்களை மீண்டும் விசாரிக்க வேண்டும் என தல்வார் தம்பதி விசாரணை நீதிமன்றத்தில் ஆருஷியின் பெற்றோர் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் இம்மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதைத் தொடர்ந்து நேரடியாக மே 13-ந் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க தடை கோரி மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் உச்சநீதிமன்றமோ, அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்குப் போகாமலேயே உச்சநீதிமன்றம் வந்தது தவறு என்று ஆருஷி பெற்றோரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்து அவர்கள் போயினர் .அங்கும் அவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 14 சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற தல்வார் தம்பதியினரின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து 14 சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யலாம் என உத்தரவிட்டது.

Aarushi murder

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+