40 வயதுக்குள் சாதித்த உலகின் அதிகாரமிக்க தொழில் அதிபர்கள்
வாஷிங்டன்: 40 வயதிற்குள் உலகின் மிகவும் அதிகாரமிக்க தொழில் அதிபர்கள் ஆனவர்களைப் பற்றி பார்ப்போம்.
சொந்தமாக தொழில் துவங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. சிலருக்கு தொழில் செட்டாகி லாபம் கிடைக்கும், சிலர் தங்கள் தொழிலால் உலகப் புகழ் பெறுவார்கள். சிலர் சொந்த தொழில் துவங்கி நஷ்மடைவார்கள்.
இப்படி இத்தனை பிரச்சனை இருப்பது தெரிந்தும் சொந்தமாக தொழில் துவங்கி 40 வயதிற்குள் உலகின் மிகவும் அதிகாரமிக்க தொழில் அதிபர்களாக இருப்பவர்களைப் பார்ப்போம்.

மார்க் ஜக்கபர்க்
ஃபேஸ்புக் நிறுவனரும், சிஇஓவுமான மார்க் ஜக்கர்பர்க்கிற்கு வெறும் 29 வயது தான் ஆகிறது. ஆனால் அவர் பில்லயன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2010ம் ஆண்டில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியது. இப்போது வருமானத்தை பற்றி சொல்லவா வேண்டும். ஜக்கர்பர்க் நியூவார்க் பள்ளிகளுக்கு 100 மில்லியன் டாலர்களை நன்கொடையாக அளித்தார்.

பிஸ் ஸ்டோன்
ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிஸ் ஸ்டோன்(39) 40 வயதிற்குள் உலகின் அதிகாரமிக்க தொழில் அதிபர்களில் ஒருவராக உள்ளார்.

சர்கீ ப்ரின்
கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனரான சர்கீ ப்ரின் வெறும் 39 வயதில் அதிகாரமிக்க தொழில் அதிபர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டும்.

ஆதித்யா மிட்டல்
ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான ஆதித்யா மிட்டலும்(37) அதிகாரமிக்க தொழில் அதிபர் ஆவார். இவர் பிரபல தொழில் அதிபர் லக்ஷ்மி மிட்டலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான் ஆர்னல்ட்
சென்டாரஸ் அட்வைசர்ஸ் நிறுவனர் ஜான் ஆர்னல்டுக்கு வயது 39 தான் ஆகிறது. ஆனால் அவர் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துடன் அமெரக்காவின் இரண்டாவது இளம் பில்லியனர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications