வடகிழக்கு மாநிலம் பற்றி ராகுலுக்கு போதுமான அறிவு இல்லை: அசாம் கன பரிசத்

Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் 3 முறை ஆட்சி அமைத்த அசாம் கன பரிசத் அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று முத்திரை குத்தி ராகுல் கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் அவருக்கு நாட்டின் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி போதுமான அறிவு இல்லை என்பது அம்பலமாகியுள்ளது என அந்த கட்சி விமர்சித்திருக்கிறது..

விக்கிலீக்ஸ்

விக்கிலீக்ஸ் அண்மையில் ஒரு தகவலை அம்பலப்படுத்தியது.. 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அசாம் கன பரிசத் பற்றி கருத்து தெரிவித்திருந்த ராகுல் காந்தி, அசாமில் பிரிவினைவாத இயக்கமான அசாம் கன பரிசத்தை இந்தியாவும் ஹமாஸை அமெரிக்காவும் ஆட்சி அமைக்க அனுமதித்திருக்கிறது என்று கூறியிருந்திருக்கிறார்.

கண்டனம்

இதற்கு அசாம் கன பரிசத் அமைப்பின் செயலாளர் துர்கா தாஸ் போரோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசாமில் 6 ஆண்டு காலம் அமைதி வழியிலான போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்தனர். இதன் விளைவாகவே 1985 ஆம் ஆண்டு ராகுலின் தந்தை ராஜிவ் காந்தியால் அசாம் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1986ஆம் ஆண்டு முதல் 3 முறை அசாமில் அசாம் கன பரிசத் ஆட்சியையும் அமைத்தது. இந்த நிலையில் தீவிரவாத பிரிவினைவாத இயக்கத்தினருடன் அசாம் கனபரிசத்தை ராகுல் ஒப்பிட்டு பேசியிருப்பது எங்களை அவமதிப்பதாகவே கருதுகிறோம்.

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிற ராகுல் காந்தியின் இத்தகைய கருத்துகள் மூலம் அவருக்கு அசாம் பற்றியோ நாட்டின் வடகிழக்கு மாநிலம் பற்றியோ போதுமான அறிவு இல்லை என்பதே வெளிப்படுத்துகிறது என சாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+