ஐபிஎல் தலைவர் பதவியில் மீண்டும் இருக்க மாட்டேன் ராஜிவ் சுக்லா

Subscribe to Oneindia Tamil

I will not take up IPL position again: Rajeev Shukla
டெல்லி: ஐபிஎல் பிக்ஸிங் நாட்டை உலுக்கி வரும் நிலையில் இனிமேல் (அடுத்த முறை) ஐபிஎல் அமைப்புக்குத் தலைவராக இருக்கமாட்டேன் என்று அதன் தலைவர் ராஜிவ் சுக்லா அறிவித்திருக்கிறார்.

அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐபிஎல் அமைப்பின் தலைவர் பதவி ஓராண்டு. ஒவ்வொரு ஆண்டும் இது புதுப்பிக்கப்படும். தொடர்ந்து 3வது ஆண்டாக இப்பதவியை வகிக்க விரும்பவில்லை.ஐபிஎல் போட்டி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் மைதானங்கள் நிரம்பி வழிந்தன. எப்பதவிக்கும் நான் ஆசை கொள்ளவில்லை. ஐபிஎல் தலைவர் பதவி எனக்கு அளிக்கப்பட்டபோது அதை ஏற்று என்னால் முடிந்த அளவு சிறப்பாகப் பணியாற்றியுள்ளேன்.

எங்களது பிரதான நோக்கம் பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட்டின் மாண்பைக் காப்பதுதான். ஒரு சிலரின் நடத்தையால் ஐபிஎல் போட்டியின் மதிப்பு எவ்விதத்திலும் குறையவில்லை. பிக்ஸிங் போன்ற குற்றச்சாட்டில் ஈடுபடும் வீரரை குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். விசாரணை முடியும் வரை சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+