நான் மட்டும் தலைவனா இருந்திருந்தா... பவார் 'பலே' பேச்சு!
Subscribe to Oneindia Tamil

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான பவார், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், ஐசிசி தலைவராகவும் இருந்தவர். கிரிக்கெட் வாரியத்தில் இவரது செல்வாக்கு இன்னும் கூட உள்ளது.
இவரது பதவிக்காலத்திலும் கூட ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்தன. ஆனால் அதற்காகவெல்லாம் இவர் பதவி விலகவில்லை. இந்த நிலையில் சீனிவாசன் மீது இவர் கடுமையாக பாய்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,நான் பிசிசிஐ தலைவராக இருந்திருந்தால் இதுபோன்ற முட்டாள்தனங்களுக்கு இடம் கொடுத்திருக்க மாட்டேன். இப்போது நடந்து வருவது எனக்குக் கவலை அளிக்கிறது.
மொத்த விவகாரத்தையும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஐபிஎல் போட்டிகள் குறித்து உள்துறை அமைச்சகம் முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டும்.உண்மை எது, பொய் எது என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்ய வேண்டும் என்றார் பவார்.












Click it and Unblock the Notifications