திருமணத்திற்காக அங்கீத் சவானுக்கு தாற்காலிக ஜாமீன்.. 6ம் தேதி திகார் சிறைக்கு திரும்பி வர வேண்டும்!

Subscribe to Oneindia Tamil

Ankeet chavan
டெல்லி: ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அங்கீத் சவானுக்கு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்தது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் கடந்த 16ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சவான் ஜாமீன் கோரி டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

நான் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததற்கான எந்த நேரடி ஆதாரமும் இல்லை. என்னை பொய்யாக இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். வரும் ஜூன் 2ம் தேதி எனக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. குறித்த நாளில் திருமணம் நடக்காவிட்டால் என்னுடைய மற்றும் என் வருங்கால மனைவியுடைய கௌரவம் பாதிக்கப்படும். அதனால் ஜாமீன் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் சவானுக்கு வரும் ஜூன் 6ம் தேதி வரை ஜாமீனில் வெளியே இருக்க அனுமதி அளித்துள்ளது. வரும் 6ம் தேதி அவர் திகார் சிறைக்கு திரும்பவிட வேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+