பிசிசிஐக்கு எதிராக மும்பையில் மோசடி வழக்கு - நாளை விசாரணை!
மும்பை: ஸ்பாட் பிக்ஸிங் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க உறுப்பினரான நரேஷ் மகானி தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில், நடப்பு ஐபிஎல் போட்டியின் அனைத்து ஆட்டங்களுமே மேட்ச் பிக்ஸிங் செய்யப்பட்டவை. இதில் அணிகளின் உரிமையாளர்களுமே ஈடுபட்டிருக்கின்றனர். இந்தப் போட்டிகள் விளையாட்டுக்காக நடத்தப்பட்டவை அல்ல.. பில்லியன் டாலர் பணத்தை சட்டவிரோதமாக சம்பாதிப்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டவை. பிக்ஸிங் என்ற பெயரில் பொதுமக்களை அவர்கள் ஏமாற்றியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் மற்றும் இந்திய் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications