பள்ளிகளில் அதிகரித்து வரும் செக்ஸ் ஊழல்கள்: அதிர்ச்சியில் சீனப்பெற்றோர்
பீஜிங்: சீனாவில் பள்ளி மாணவிகளிடம் நடந்த செக்ஸ் ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பல ஆசிரியர்கள் அங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பல மாதங்களாக தனது வகுப்பு மாணவிகள் பலரை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக 55 வயதான யாங் ஷிபு என்ற ஆசிரியர் டோங்போ என்ற ஊரில் கைது செய்யப்பட்டுள்ளாr. இவர் மீது பாதிக்கப்பட்ட மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் கொடுத்த புகாரின் பேரில் இவர் கைதாகியுள்ளார்.
யாங் ஷிபு வேலை பார்த்து வரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல ஷென்ஷன் என்ற ஊரில் ஒரு தொடக்கப் பள்ளியின் ஆசிரியரும் இதேபோன்ற பாலியல் புகாரில் சிக்கி கைதாகியுள்ளார். அவரது வயது 42 ஆகும். வு என்ற துணைப் பெயர் கொண்ட இவர் பல மாணவிகளை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பாலியல்ரீதியாக தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளார். தற்போது தனது தவறை இவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதேபோல 12 மாணவிகளை சீரழித்ததாக மேலும் ஒரு ஆசிரியரும் கைதாகியுள்ளார். அவர் ஒரு கணித ஆசிரியர் ஆவார். தங்களை எப்படியெல்லாம் இந்த ஆசிரியர் துன்புறுத்தினார் என்பது குறித்து அந்த 12 மாணவிகளும் விரிவாக புகாரில் தெரிவித்துள்ளனர்.
யின் என்ற இன்னொரு பள்ளிக்கூட நிர்வாகி, ஐந்து மாணவிகளை தான் சீரழித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சீனாவில் இந்த கைதுகளும், பாலியல் சித்திரவதைகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications