பாகிஸ்தானுக்கு 15 பில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க சவூதி முடிவு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் எரிசக்தி துறை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் கடும் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் கூடுதலாக 15 மில்லியன் டாலர் கடனுதவியை அளிக்க சவூதி அரேபியா முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், 1998ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்திய போது சர்வதேச தடைகளை எதிர்கொண்ட நிலையில் பாகிஸ்தான் சவூதியிடம் இருந்து 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் இறக்குமதி செய்தது. அப்போது நவாஸ் ஷெரீப் ஆட்சியில் இருந்தார். இப்போது நவாஸ் ஷெரீப் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் சவூதி அரேபியா ரூ15 பில்லியன் டாலர் கடன் உதவியை செய்ய முன்வந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
சவூதி மன்னர் குடுமத்துக்கு நவாஸ் ஷெரீப் மிக நெருக்கமானவர் என்பதுடன் கடந்த ஆசிப் அலி சர்தாரி ஆட்சிக் காலத்தில் எத்தனையோ உதவிகளை பாகிஸ்தான் கோரிய போது அதை சவூதி நிராகரித்திருந்தது என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தனிப் பெரும் கட்சியாக நவாஸ் ஷெரீப்பின் கட்சி வெற்றி பெற்ற உடனே சவூதி அரேபிய தூதர் எண்ணெய் இறக்குமதி உதவியை அறிவித்திருந்தார். நாளொன்றுக்கு 1 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மற்றும் 15 ஆயிரம் டன் பர்னேஸ் ஆயில் சவூதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications