பிசிசிஐ 5 துணைத் தலைவர்கள் இன்று ராஜினாமா?: அருண் ஜேட்லி சூசகம்!

சீனிவாசனுக்கு எதிராக பிசிசிஐயின் பொருளாளர் அஜய் ஷிர்கே, செயலர் ஜக்தாலே ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் பிசிசிஐயின் துணைத் தலைவர்களான அருண் ஜேட்லி, ஷிவ்லால் யாதவ், சிட்ரக் மித்ரா, நிரஞ்சன் ஷா மற்றும் சுதிர் தபிர் ஆகியோர் இன்று ராஜினாமா செய்யப் போவதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சிட்ரக் மித்ரா தாம் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று மறுத்திருக்கிறார். அதே நேரத்தில் சுதிர் தபிர் கண்டிப்பாகா ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் அருண் ஜேட்லியிடம் இரண்டு பிசிசிஐ நிர்வாகிகள் நேற்று ராஜினாமா செய்துள்ளது பற்றி கேள்வி கேட்டதற்கு, ஆமாம்.. 2 நிர்வாகிகள் ராஜினாமா செய்திருக்கின்றனர்..வேறு சில நிர்வாகிகளும் ராஜினாமா செய்யப் போவதாக கூறப்படுகிறது.. பொறுத்திருங்கள்.. இன்று முக்கியமான செய்தி உங்களுக்குக் கிடைக்கும் என்று சூசகமான பதிலைக் கூறினார்.
பிசிசிஐயின் 5 துணைத் தலைவர்களும் இன்று ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டால் நிச்சயமாக வேறுவழியின்றி சீனிவாசன் தமது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என்பதைத்தான் அருண் ஜேட்லி மறைமுகமாக குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications