வந்தது சாரல் மழை... குற்றாலத்தில் தொடங்குகிறது சீசன்
குற்றாலம்: கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதாலும், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதாலும் குற்றாலம் சீசன் விரைவில் தொடங்கும் குளுகுளு சூழல் உருவாகியுள்ளது.
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்து விட்ட நிலையில் இன்று கேரளாவில் மழை பெய்யத் தொடங்கி விட்டது.
இதனால் அங்கு பருவ மழை தொடங்கியிருப்பதாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குற்றாலத்தில் மழை
இதேபோல குற்றாலம், செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

சாரல் மழை
குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சீசன் தொடங்குவதற்கான சாதகமான சூழல் எழுந்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

சங்கரன்கோவிலிலும்
குற்றாலம் தவிர சங்கரன்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மக்கள் சாரல் மழையை சந்தித்துள்ளனர்.

சீக்கிரமே தொடங்கும் சீசன்
இந்த மழை நீடித்தால், கேரளாவில் மழை வலுத்தால், குற்றாலம்அருவிகளில் சீக்கிரமே தண்ணீர் கொட்டி சீசன் தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 மாதங்களுக்கு ஜில் ஜில்- கூல் கூல்
குற்றாலத்தில் சீசன் தொடங்கினால் 3 மாதங்களுக்கு அதாவது ஆகஸ்ட் மாதம் வரை குளுகுளு சூழல் நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications