நேஹா சம்பாரியை மணந்தார் சவான்
மும்பை: ஐபில் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அங்கீத் சவானுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றத்திற்காக கடந்த மாதம் 16ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அங்கீத் சவான் இன்று தனக்கு திருமணம் நடப்பதை காரணம் காட்டி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் வரும் 6ம் தேதி திகார் சிறைக்கு சென்றுவிட வேண்டும்.

சவானுக்கும், நேஹா சம்பாரிக்கும் இன்று மும்பையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு யார், யாரெல்லாம் வருகிறார்கள் என்பதை ஸ்பாட் பிக்ஸிங் குறித்து விசாரித்து வரும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்தனர். அதனால் சவானின் திருமணத்தை பல கிரிக்கெட் வீரர்கள் புறக்கணித்தனர்.
திருமணத்திற்கு சென்று போலீசாரின் சந்தேகப் பார்வையில் விழ அவர்கள் விரும்பவில்லை. அதனால் தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்று கூறி திருமணத்தை தவிர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications