கொல்கத்தாவில் 21 வயது அயர்லாந்து பெண் கற்பழிப்பு: ஒருவர் கைது
கொல்கத்தா: கொல்கத்தாவில் 21 வயது அயர்லாந்து பெண்ணை கற்பழித்த சுஜோய் மித்ரா என்பவர் கைது செய்யப்பட்டார்.
டார்ஜிலிங்கைச் சேர்ந்த என்.ஜி.ஓ.வில் பணிபுரிந்து வரும் அயர்லாந்தைச் சேர்ந்த 21 வயது பெண் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவர் தனது பிறந்தநாளையொட்டி பெரிய ஹோட்டல் ஒன்றில் நண்பர்களுக்கு நள்ளிரவு பார்ட்டி கொடுத்துள்ளார்.
அந்த பார்ட்டிக்கு வந்திருந்த சுஜோய் மித்ரா(35) என்பவரை அப்பெண் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போகும் வழியில் இறக்கிவிட்டுள்ளார். அப்போது சுஜோய் அழைத்ததன்பேரில் அவர் வீட்டுக்குள்ளே சென்றுள்ளார். அவருக்கு டீ குடுக்கப்பட்டுள்ளது. அதை குடித்த அப்பெண் மயக்கம் அடைந்துள்ளார். மயங்கிய அப்பெண்ணை சுஜோய் கற்பழித்துள்ளார். டீயில் அவர் மயக்க மருந்து கலந்து கொடுத்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில் சுஜோய் கைது செய்யப்பட்டார்.