For Daily Alerts
Just In
மேற்கு வங்கத்தில் திருமணத்திற்கு சென்ற 10 வயது சிறுமி பலரால் கற்பழிப்பு
புருலியா: மேற்கு வங்க மாநிலத்தில் 10 வயது மாணவி பலரால் கற்பழிக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற 10 வயது சிறுமி பலரால் கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து சிறுமியின் குடும்பத்தார் அவரை டாடா மெயின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நேற்று இரவு கொண்டு வந்தனர். ஆனால் இது போலீஸ் வழக்கு என்பதால் மருத்துவமனை நிர்வாகிகள் சிறுமியை அனுமதிக்க மறுத்தனர்.
அதன் பிறகு போலீசார் வந்து கூறிய பிறகு சிறுமியை அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த வாரம் அயர்லாந்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கொல்கத்தாவில் கற்பழிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
A ten-year-old girl has been allegedly gangraped in West Bengal's Purulia district.
Story first published: Wednesday, June 5, 2013, 16:19 [IST]