புறம்போக்கு நிலத்துக்கு பட்டா: கருணாநிதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
சென்னை: திருவாரூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகன் மு.க. அழகிரி ஆகியோர் பெயருக்கு புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வழங்கியது செல்லாது என்று அறிவிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருவாரூர் மாவட்டம், தாழத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஜெகநாதன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், திருவாரூர் மாவட்டம் காட்டூரில், காதர் முகைதீன் என்பவரிடமிருந்து சுமார் அரை ஏக்கர் நத்தம் புறம் போக்கு நிலத்தை கடந்த 8.4.1953 அன்று கருணாநிதி வாங்கியுள்ளார். இந்த நிலத்துக்கான பட்டாவை வாங்காமலேயே 46 ஆண்டுகளாக அவர் நிலத்தை வைத்திருந்தார்.
இதற்கிடையே நத்தம் புறம்போக்கு நிலத்தை நீண்ட நாள்களாக வைத்திருக்கும் நிலமற்ற ஏழைகள் பெயரிலேயே அந்த நிலத்துக்கு பட்டா வழங்கும் திட்டத்துக்கான அரசாணை 1988ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.அந்தத் திட்டமானது 1996ஆம் ஆண்டோடு முடிந்து விட்டது.
ஆனால், 1999ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அந்த நிலத்துக்கான பட்டாவை அவரது பெயருக்கும், மு.க.அழகிரி பெயருக்கும் குடவாசல் தாசில்தாரிடம் இருந்து பெற்றுள்ளார்.
இத்தகைய பட்டா வழங்கும் அதிகாரம் தாசில்தாருக்கு கிடையாது. ஆகவே, காட்டூரில் உள்ள புறம்போக்கு நிலத்துக்கு கருணாநிதி மற்றும் மு.க. அழகிரி ஆகியோர் பெயருக்கு பட்டா வழங்கியது செல்லாது என்று கூறி, அந்தப் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அமர்வு விசாரித்து, இந்த வழக்கு விளம்பரத்துக்காகவும், உள்நோக்கத்துடனும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications