ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங், தயாநிதி மாறன் பெயரை சேர்க்க கோரிய மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளரான விகேக் கார்க் என்பவர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரது பெயர்களையும் சேர்த்து விசாரிக்கக் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதை இன்று விசாரித்த நீதிபதி ஓ.பி. ஷைனி, மலிவான ஒரு விளம்பரத்துக்காக இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துவிட்டார் என்று கூறி தள்ளுபடி செய்ததுடன் மனுதாரர விகேக் கார்க் ரூ20 ஆயிரம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications