இந்திய விமானப் படையின் மிக்-21 விபத்துக்குள்ளானது: பைலட் உயிர் தப்பினார்
Subscribe to Oneindia Tamil
ஜெய்பூர்: ராஜஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டபோது விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 விமானம் ஒன்று இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உத்தர்லாய் விமான தளத்தில் இருந்து கிளம்பியது. வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விமானம் இன்று காலை 9 மணிக்கு பார்மர் மாவட்டத்தில் உள்ள சோடியார் கிராமத்தில் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தது.

இதில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.டி. கோஸ்வாமி தெரிவித்தார். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் ஜோத்பூர் விமான தளத்தில் இருந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அறிய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications