காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு: இந்திய வீரர் பலி!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று துப்பாக்கி சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
கடந்த ஒருவார காலத்தில் பாகிஸ்தான் ராணுவம் 3வது முறையாக இன்று ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தியத் தரப்பும் பதிலடி கொடுத்தது. இதை இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்வதை பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications