நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை அஞ்சலி... சித்தி மூலம் களஞ்சியத்துடன் சமரசம்?

Subscribe to Oneindia Tamil

Anjali ready to compromise with Kalangiam?
சென்னை: நடிகை அஞ்சலிக்கு எதிராக இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு வாரன்ட் பிறப்பிக்கும் சூழல் உள்ளதால், சமாதானப் படலத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிரது.

சித்தி பாரதி தேவியுடன் பிரச்சினை ஏற்பட்டு, ஹைதராபாதுக்கு போன அஞ்சலி அங்கிருந்தபடி தன் சித்தியும், இயக்குனர் களஞ்சியமும் தனது சம்பாத்தியத்தை சுருட்டிக் கொண்டதாக குற்றம் சாட்டினார்.

தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும் கூறினார். இனி தான் சம்பந்தப்பட்ட அனைத்து முடிவுகளையும் தானே எடுப்பேன் என்றார். நான்கைந்து நாட்கள் யாருடனோ இருந்துவிட்டு திரும்பிய அஞ்சலி, இனி நான் தனியாக வாழப் போகிறேன் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் அஞ்சலி தனது முதல் எதிரி என்று வர்ணித்திருந்த சித்தி பாரதி தேவியுடன் சமாதானமாகிவிட்டார். பலுபு தெலுங்குப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அஞ்சலியுடன் அவரது சித்தியும் வந்திருந்தார்.

ஆனால் களஞ்சியத்துடன் இன்னும் சமாதானம் ஆகவில்லை. அஞ்சலி மீது அவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அத்துடன் தன் படத்தில் நடிக்காமல் ஏமாற்றுவதாக நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் தந்துள்ளார்.

களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் ஆஜராகாமல் ஹைதராபாதிலேயே இருந்து விட்டார் அஞ்சலி. அடுத்த விசாரணையின்போது அவர் ஆஜராகாவிட்டால் வாரன்ட் பிறப்பிக்கப்படும் சூழல் உள்ளது.

இதற்கிடையே, படத்தில் நடித்துக் கொடுத்துவிடுகிறேன். வழக்கெல்லாம் வேண்டாம். சமாதானமாகப் போகலாம் என தன் சித்தி மூலமே களஞ்சியத்துடன் பேசியுள்ளாராம் அஞ்சலி.

சினிமாக்காரங்க உலகமப்பா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+