For Daily Alerts
Just In
சென்னை அரசு பொது மருத்துவமனையிலும் இனி... 'அம்மா'!
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் முதல் முறையாக அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அங்கு விற்கப்படும் இட்லி உள்ளிட்ட அத்தனை உணவுகளுக்கும் நல்ல கிராக்கி இருக்கிறது.
இதையடுத்து மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் இதர மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதை முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் திறந்து வைத்தார்.
தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஒரு அம்மா உணவகம் வரவுள்ளது. அடுத்து எழும்பூர் அரசினர் குழந்தைகள் நல மருத்துவம்னையிலும் ஒரு கிளை திறக்கப்படுகிறது.
இதற்கான அனுமதியைக் கோரி அரசுக்கு மாநகராட்சி நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. அனுமதி கிடைத்ததும் இங்கு இனி அம்மா உணவகம் செயல்படும்.
Comments
English summary
Chennai corporation has decided to open branches of Amma canteen in Chennai GH and children's hospital soon.
Story first published: Friday, June 7, 2013, 17:34 [IST]