தமிழக டி.ஜி.பி.யை கண்டித்து 10ம் தேதி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்
சென்னை: தமிழக டிஜிபி ராமானுஜம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 10ஆம் தேதி தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
கரூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் 17 பேர் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது வழக்கறிஞர்களின் புகார். எனவே வழக்கறிஞர்கள் மீதான வழக்கை திரும்ப பெறக் கோரி சென்னையில் டி.ஜி.பி ராமானுஜத்தை சந்தித்து மனு கொடுக்க வழக்கறிஞர்கள் சென்றனர். ஆனால், வழக்கறிஞர்களை சந்திக்க மறுத்த டி.ஜி.பி., புகார் மனுவை வாங்க மறுத்துவிட்டார்.
எனவே வழக்கறிஞர்கள் மீது பகை உணர்வுடன் செயல்பட்டு வரும் டி.ஜி.பி. மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வழக்கறிஞர் சங்கத் தலைவர் பரமசிவன்,சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
டி.ஜி.பி. ராமானுஜம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட கோரியும் வரும் 10ஆம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications