பாமக அங்கீகாரம் ரத்து… ராமதாஸ், வன்னியர் சங்கம் பதிலளிக்க ஹைகோர்ட் நோட்டீஸ்

சென்னை தாம்பரத்தை சேர்ந்த வாராகி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அதில் கூறியிருப்பதாவது:
கடந்த மாதம் 25ஆம் தேதி பா.ம.க சார்பில் சித்திரை திருவிழா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை நடத்த சில நிபந்தனைகளுடன் பா.ம.க.வினருக்கு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுமதி வழங்கினார். ஆனால், இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பா.ம.க.வினர் மீறியுள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை சேப்படுத்தியுள்ளனர்.
மரக்காணத்தில் அப்பாவி தலித் மக்கள் மீது கொடூரமாக தாக்கல் நடத்தி, அவர்களது வீடுகளை பா.ம.க.வினர் தீ வைத்து எரித்துள்ளனர். மேலும் 3 அரசு பேருந்துகள், 3 தனியார் வாகனங்கள், துணை சூப்பிரண்டுகளின் வாகனங்கள் ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தி, தீ வைத்துள்ளனர்.
இருபிரிவினர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி, அரசியல் சட்டத்துக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கும் எதிராக செயல்படும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மனு தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், பா.ம.க., வன்னியர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications