காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கு: ஜூன் 19ல் தீர்ப்பு?
புதுச்சேரி: காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் வரும் 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில், ஜெயேந்திரர், விஜந்திரர் உள்பட 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு புதுச்சேரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வழக்கில் எதிர்தரப்பு, சாட்சிகளிடம் விசாரணை முடிந்துவிட்டது.
இந்த நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி அப்ரூவர் ரவி சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு நீதிபதி முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயேந்திரர் உள்பட 14 பேர் ஆஜராகவில்லை.
அதேசமயம் விஜேந்திரர், ரகு, குமார், ஆனந்தகுமார், அனில்குமார், சதீஷ், சேகர், தேவராஜ், சுந்தரேசன் ஆகிய 9 இன்று பேர் ஆஜரானார்கள். அப்போது, மனுதாரை விடுவிக்கலாமா? வேண்டாமா? என்று தீர்ப்பு வெளியாகும் அன்று தெரிவிப்பதாக நீதிபதி முருகன் கூறினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அன்றைய தினம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications